Author: தமிழவன்

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது

நான் சசிகலாவை சமாளித்தேன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்ததால், சசிகலா குடும்பத்தினர் தனக்கு துரோகி பட்டத்தை கொடுத்தனர் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு ஓ.பி.எஸ் பேசியதாவது: நான் ஜெ.விற்கு விசுவாசமாக இருந்தேன். அதனால்தான் அவர் என்னை இரண்டு முறை முதல்வர் பதவியில் அமர வைத்தார். எனக்கு அது போதும். பிரதமர் மோடி கூறியதால்தான் […]

இப்போ குக்கர் சின்னமும்?

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டது. ஜெ.வின் மறைவிற்கு பின், அதிமுகவின் கட்சி பெயர் மற்றும் சின்னத்திற்கு தினகரன் மற்றும் ஓபிஎஸ்-எடப்பாடி அணி இரண்டும் போட்டி போட்டது. எதிர்பார்த்தது போல், ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கே அதை தேர்தல் ஆணையம் வழங்கியது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தினகரன். இது ஒருபுறம் இருக்க, […]

போயஸ் கார்டனை சிபிஐ கைப்பற்ற வேண்டும்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவ்வப்போது அரசியல் பரபரப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்று சேலம் பகுதியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். இந்த கூட்டத்தில் தீபா பேசியதாவது: அண்ணா, எம்.ஜி.ஆரை கண்டெடுத்தார். எம்.ஜி.ஆர், அம்மாவைக் கண்டெடுத்தார். நீங்கள் என்னைக் கண்டெடுத்திருக்கிறீர்கள். நானாக அரசியலுக்கு வரவில்லை. நீங்கள் அழைத்ததால் வந்தேன். அம்மாவுக்கென்று பதவி ஆசை இல்லை, தனி வாழ்க்கை இல்லை. அவரின் புகழுக்குக் […]

மோடி கூறித்தான் எல்லாம் செய்தேன்

பிரதமர் மோடி சொல்லித்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்தேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக பேசியுள்ளார். முதல்வர் பதவி பறிக்கப்பட்டதும், ஜெ.வின் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து தர்ம யுத்தத்தை தொடங்கினார். அவர் பக்கம் 11 எம்.எல்.ஏக்கள் மட்டுமே சென்றனர். எனவே, அவரால் மீண்டும் முதல்வர் பதவியில் அமர முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் சசிகலா தரப்பு அமர வைத்தது. அதன் பின் சில மாதங்கள் […]

தாய் இறந்தது கூட தெரியாமல் அருகில் தூங்கிய மகன்

தன்னுடைய தாய் இறந்தது கூட தெரியாமல், 5 வயது சிறுவன் அருகிலேயே தூங்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி பலரின் மனதையும் உலுக்கியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிப்பவர் சமீனா சுல்தானா. இவரின் கணவர் அயூர் 3 வருடங்களுக்கு முன்பு அவரை பிரிந்துவிட்டார். இதனால், அவர் தன்னுடைய 5 வயது மகனோடு வசித்து வந்தார். அந்நிலையில், சமீனாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை அறிந்த அயூப் அவரை உஸ்மானிய மருத்துவமனையில் […]

தீவிர அரசியலில் நுழைய ரஜினிகாந்த் முடிவு

தீவிர அரசியலில் நுழைய ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ள நிலையில், ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழகத்தில் அவர் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் தேதி தனி கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்க போவதாக தனது ரசிகர் மன்ற நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார். இதன்படி தமிழகத்திலுள்ள அவரது அனைத்து ரசிகர் மன்றத்தையும் ரஜினி மக்கள் இயக்கமாக மாற்றினார். இந்நிலையில் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் ம்செல்ல […]

காதலர் தினத்தில் சிம்பு-ஓவியா அறிவித்த முக்கிய அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்பு இசையமைத்த பாடல் ஒன்றை ஓவியா பாடியது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த நிலையில் தற்போது முதல்முறையாக இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரியவுள்ளனர். ‘காஞ்சனா 3′ படத்தில் நடித்து வரும் ஓவியா தற்போது ’90ml’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அனு உதீப் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘குளிர் 100’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு […]

சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும்

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இருந்தே சசிகலா தலைமையிலான அணிக்கே ஆதரவு கொடுத்து வரும் பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி, தற்போது சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சுவாமி, ‘திமுக ஒரு தேச விரோத, இந்து விரோத கட்சி என்றும், நாட்டை பிரிப்பதற்காக முயற்சி எடுத்த கட்சி என்றும் கூறியுள்ளார். அதிமுக பிளவுபட்டிருந்தால் திமுக ஆட்சிக்கு வந்துவிடும். எனவே அதிமுக ஒன்றிணைந்து […]

தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்காளியாகவும் இருக்கவேண்டாம், பகையாளியாகவும் இருக்கவேண்டாம்

தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் சபைகளில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்காளியாகவும் இருக்கவேண்டாம், பகையாளியாகவும் இருக்கவேண்டாம். தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆட்சியமைக்கும் சபைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பங்காளியாகவோ, பகையாளியாகவோ இருக்காது எனவும் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னான நிலமைகள் தொடர்பாக நேற்று மாலை யாழ்.நகரில் நடைபெற்ற ரெலோ அமைப்பின் ஊடகவியலானர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே என்.சிறீகாந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளார். […]

யாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட்

யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் மார்ட்டீன் வீ தியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தி ல் நடைபெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது