முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலமின்மை ஆகிய இரண்டும் பல நடிகர்களை அரசியலுக்கு இழுத்துள்ளது. நடிகர்களில் பலர் கட்சி ஆரம்பிக்கவும், முதல்வர் கனவில் மிதக்கவும் ஆரம்பித்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்துவிட்டார்., ரஜினியும் அரசியல் கட்சியை விரைவில் ஆரம்பிகக்வுள்ளார். இவர்கள் மட்டுமின்றி விஜய், விஷால், பாக்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியலில் எப்போது வேண்டுமானாலும் குதிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் வரும் […]
Author: தமிழவன்
ஸ்ரீதேவி மரணம் குறித்து குறித்து கமல் கூறியது என்ன தெரியுமா?
இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர் மாரடைப்பால் திடீரென காலமானார் என்ற அதிர்ச்சி தரும் செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஸ்ரீதேவியின் மறைவு குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்ரீதேவியுடன் பல திரைப்படங்கள் இணைந்து நடித்தவரும், ஸ்ரீதேவியின் குடும்ப நண்பர்களில் ஒருவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஸ்ரீதேவி மறைவு […]
இன்றைய ராசிபலன் 26.02.2018
மேஷம்: சிறிய வேலைக்கும் விடா முயற்சி தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும். லாபம் சுமாராக இருக்கும். விருந்தினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையளிக்கும். ரிஷபம்: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சமாளிக்க முடியாமல் திணறுவர். பெண்கள் கணவரின் அன்பை பெறுவர்.வாகனப் பயணத்தில் மித வேகம் நல்லது. மிதுனம்: முக்கிய செயல் நிறைவேற […]
உடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை
இயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்து உடல் எடையை அதிகரிக்கிறது. கறிவேப்பிலை செரிமான பிரச்சினையைப் போக்க உதவும். கறிவேப்பிலையை பச்சையாகவும் ஜூஸ் செய்தும் உட்கொள்ளலாம். காலை நேரத்தில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சிறிது எடுத்துக்கொண்டால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை குறைய வழிவகுக்கும். பச்சை கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்க அதிகளவில் உதவும். ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து […]
ஸ்ரீதேவி மறைவிற்கு அமெரிக்க தூதரகம் இரங்கல்
நடிகை ஸ்ரீதேவி நேற்று துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் அவருக்கு இந்தியா முழுவதிலும் உள்ள பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீதேவி இந்தியாவில் மட்டுமின்றி உலகப்புகழ் பெற்றவர் என்பதால் அவருக்கு உலகின் பல நாடுகளில் உள்ள விஐபிக்களிடம் இருந்து இரங்கல் அறிக்கைகள் வெளியாகி வருகின்றன அந்த வகையில் மறைந்த ஸ்ரீதேவியின், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு மும்பையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் தனது […]
அமெரிக்கவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்
குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு விழாவில் கலந்து கொள்ள தென்கொரியா செல்லும் வடகொரியா உயர் மட்ட குழு அங்கு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்துள்ளது. நீண்ட கால பகையை கடந்து தென் கொரியாவில் நடைபெற்ற குளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியாவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தென்கொரியா சென்றது குறிப்பிடத்தக்கது. வடகொரியா அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்காவை தானாக வம்பிழுத்து உலக நாடுகளை அச்சத்தில் […]
நாளை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு!
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது உடல் இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா வரவுள்ளது. தடவியல் துறையின் சான்றிதழ் கிடைக்காததால் உடலை இந்திய கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல், அவரது வீட்டில் […]
நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் விஷால் தீவிர தலைவலி காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான நடிகர் விஷால், அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவன் இவன் படத்தில் மாறுகண் கேரக்டரில் விஷால் நடித்ததால் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். மேலும் சமீபத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்தபோது, விஷாலுக்கு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் டெல்லியில் சண்டைகோழி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து […]
மனிய உரிமை மீறல் குற்றங்களுக்காக கொழும்பு மீது பன்னாட்டு விசாரணை!!
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதை உறுதிப்படுத்துவதற்காக அதன் மீது உலக சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையிலான (அதாவது பன்னாட்டு நீதி விசாரணை போன்ற ஒன்று) தெரிவுகள் உட்பட மாற்று வழிகளை உலக நாடுகள் ஆராய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹூசைன். இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில் கொழும்பு […]
சிரியா மக்களின் உயிர்களை காப்பாற்றுமா ஐநா சபை?
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் நிறுத்தம் தொடர்பாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் விவாதித்துள்ளது. சிரியா அரசு, கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுட்டா நகரை மீட்பதற்காக ரஷ்யா படைகளின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 400 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். பலியானவர்களில் 95-க்கும் மேற்பட்டோர் சின்னஞ்சிறு குழந்தைகள் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டாலும், பயங்கரவாதிகளிடம் இருந்து கவுட்டா நகரை […]





