Author: அருள்

மீண்டும் வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. மத்திய வங்கியின் நாணய மாற்று வீத தரவுகளுக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.42 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வாரம் டொலருக்கு எதிராக வளர்ச்சியடைந்து காணப்பட்ட ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் திடீர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஜனாதிபதி

மைத்திரி மீது நீதிமன்றத்தில் மற்றுமொரு புகார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான நிரந்தர தலைவரை நியமிக்காமல் அரசியலமைப்பை மீறி வருகிறார் என்று குற்றம்சாட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. 14 நாட்களுக்கு வரையே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் ஒருவரை நியமிக்க முடியும் என்ற போதும், நீதியரசர் தீபாலி விஜேசுந்தரவை மீண்டும் மீண்டும் நியமிக்கும் சிறிங்கா அதிபரின் நடவடிக்கையை சவாலுக்குட்படுத்தியே இந்த மனு தாக்கல் […]

முக்கியஸ்தர் ஒருவருக்கு சவால் விடுத்த மகிந்த

கொக்கேன் பாவிக்கும் அமைச்சர்கள் இருப்பார்களேயானால் உடனடியாக வெளிப்படுத்துமாறு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொக்கேன் பாவிப்பதாக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த கருத்து தொடர்பில் கூறும் பொழுதே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சரவையிலுள்ள அனைவருக்கும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இருக்கின்ற அனைவரையும் குற்றஞ்சாட்ட முடியாது, அவற்றிலிருந்து விடுபட அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே போதைப் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 20.02.2019

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதுவேலை அமையும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். […]

சுசானாவை ஏமாற்றிய நடிகர் ஆர்யா- எங்க வீட்டு மாப்பிள்ளை

நடிகர் ஆர்யாவை முன்வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்பும் போட்டியிட கடைசியின் நிகழ்ச்சியில் 16 பெண்கள் பங்குபெற்றனர். எல்லோருக்கும் போட்டி வைத்து கடைசியில் 3 பெண்களை இறுதி செய்தார். அதில் இருந்து யாரையாவது வாழ்க்கை துணையாக தேர்வு செய்வார் என்று பார்த்தால் நடிகை சயீஷாவை வாழ்க்கை துணையாக முடிவு செய்துள்ளார். இவரின் கல்யாணம் குறித்து ஒரு பேட்டியில் எங்க வீட்டு […]

Ranil

பழையதை மறப்போம்! ரணில் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

நடந்த உண்மைகளை மறந்து, மன்னித்து புதிய வழியில் செல்வோமென மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ரணில், பழையதை மறப்போம் மன்னிப்போம் என கூறியிருந்தார். இக்கருத்து, பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலும் இக்கருத்தை மீண்டும் ரணில் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டுமென்றால், பழைய விடயங்களை மறந்து புதிய பாதையை […]

தூக்கில் தொங்கிய நிலையில் தாய் ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு – சிராட்டிகுளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் தாய் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வசித்து வந்த யோகராசா சரஸ்வதி (வயது 52) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த தாயின் மகன் யோகராசா துசியந்தன் (2018) க பொ த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் சுகயீனம் காரணமாக கடந்த 17ஆம் […]

முல்லைத்தீவில் பொலிஸாரிற்கு எதிராக மக்கள் போராட்டம்

விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பக்கச்சார்பாகப் பொலிஸார் நடந்து கொண்டனர் எனக் குற்றஞ்சாட்டி ஒட்டுசுட்டான் மக்கள் இன்று வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு முத்துஜயன் கட்டுப்பகுதியில் வலதுகரை பிராதன வீதியில் 18.02.19 அன்று மதுபோதையில் உந்துருளியில் பயணித்த மூவர், மிதிவண்டியில் வீதியில் செல்லமுற்பட்ட தாயார் ஒருவரை மோதித் தள்ளினர். படுகாயமடைந்த பெண் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்கா வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். […]

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

யாழ்.கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு தாக்குதல் தொடர்பாக செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பதற்காக தான் சென்றிருந்தபோது, தனக்கு அருகில் வந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி, தன்னை அங்கிருந்து செல்லுமாறு கூறியதாகவும் அங்கிருந்து செல்ல தான் மறுப்பு தெரிவித்தமையால் தன்னை தாக்கியதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்ய […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 19.02.2019

மேஷம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து முக்கியமுடிவு ஒன்று எடுப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்புவழியில்நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அனுபவ அறிவு வெளிபடும் நாள். ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரைசந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப்போகும். மகளுக்கு நல்லவரன் அமையும். புதுவேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட […]