கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலையடுத்து, நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியாக அனைத்து பாடசாலைகளும் கடந்த 22ஆம் திகதியிலிருந்து மூடப்பட்டிருந்தன. அதனைத்தொடர்ந்து முப்படையினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் இணைந்து தொடர்ச்சியாக இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தரம் 6 இற்கு மேற்பட்ட வகுப்புக்களுக்கு நாளை (திங்கட்கிழமை) இரண்டாம் தவனைக் கல்வி நடவடிக்கைகள் […]
Author: அருள்
இன்றைய ராசிபலன் 05.05.2019
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். உடல் நலத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் பகைமை வந்துச் செல்லும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். […]
காத்தான்குடியில் ஆயுதங்கள் மீட்பு
கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் மையவாடியிலிருந்து இருந்து இன்று காலை ஆயுதங்கள் உட்பட சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி ஜாமியுழ்ழாபீரின் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் இருந்தே இந்த ஆயுதங்களும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பு அந்தோனியர் ஆலயத்தில் அருகில் காத்திருந்த பேராபத்து…
கொழும்பு- கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இரண்டு குண்டு வெடிப்புக்களை நடாத்த திட்டமிட்டிருந்ததாக பாதுகாப்பு தரப்பினா் நடாத்திய விசாரணைகளின் மூலம் தொியவந்துள்ளது.கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதன் பின்னா் ஆலயத்திலிருந்து 100 மீற்றா் துாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றை சோதனையிட்ட இராணுவத்தினா் மற்றும் விசேட அதிரடிப்படையில்குறித்த வாகனத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த ஆபத்தான குண்டு ஒன்றை வெடிக்கவைத்திருந்தனா். குறித்த வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இந்த வான் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து […]
திட்டமிட்டபடி 6ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படுமா?
இலங்கையின் அனைத்துப் பாடசாலைகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் உத்தரவாதம் அளித்ததன் பின்னரே எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகளை இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி, அமைச்சரவை, உளவுப் பிரிவு, பாதுகாப்பு சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இந்த உத்தரவாத்தை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள சில பாடசாலைகளின் பாதுகாப்பு […]
மாத்தளையில் வெடிப்பு சம்பவம்!
மாத்தளை ,பலக்கடுவ ,வெலிக்கந்த பகுதியில் பாரிய வெடிப்புச் சத்தமொன்று கேட்டதையடுத்து படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். விலங்குகளை விரட்டும் வகையில் பட்டாசு ஒன்றை விவசாயி ஒருவர் வெடிக்கச் செய்ததாக தகவல் வந்தாலும் அந்த சத்தம் பாரிய அளவில் உக்குவளை பிரதேச செயலாளர் பிரிவின் போவத்தை ,வரக்கமுற,கலல்பிட்டிய,பலக்கடுவ ஆகிய பகுதிகளுக்கும் கேட்டதால் படையினரும் பொலிஸாரும் இணைந்து அங்குள்ள மலைப்பகுதி ஒன்றில் தேடுதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். மாத்தளை – அலவத்துகொட பொலிஸாருடன் […]
தற்கொலை குண்டுதாரி சஹரான் இன்னும் இறக்கவில்லையா?
ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரான் உயிரிழக்கவில்லை என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சஹரான் உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அரச ஊடகம் புலனாய்வுத் துறையினரை மேற்கோளிட்டு இன்று (சனிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது . அதில் தற்கொலைதாரிகளுடன் சஹரான் வந்திருந்தாலும் அவர் தற்கொலை தாக்குதல் நடத்தாமல் தூர இருந்து குண்டு ஒன்றை வெடிக்கச் செய்திருக்கலாமென பாதுகாப்பு தரப்பு சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைதாரியின் […]
இன்றைய ராசிபலன் 04.05.2019
மேஷம்: இன்று வீண் செலவு ஏற்படும். காரியங்களில் தாமதம் உண்டாகும். உடற்சோர்வு மன சோர்வு வரலாம். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9, 3 ரிஷபம்: இன்று இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் […]
ரி 56 ரக துப்பாக்கிகள் மீட்பு
புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கால்வாய் ஒன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகளும், ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. தனியார் பாதுகாப்பு அதிகாரியொருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. குப்பைகள் அகற்ற பாவிக்கும் கறுப்பு நிற பொலித்தீன் பையால் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன.
கொடூர தாக்குதலை நடத்திய மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம்!
புல்வாமா உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா அறிவித்தது. சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டதையடுத்து, அசாருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. மசூத் அசார் பயணம் மேற்கொள்ள தடையையும் விதித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டது. மசூத் அசாருக்கு எதிரான நடவடிக்கைகளை உரிய […]





