Author: அருள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடவடிக்கை எடுக்க யாருக்கு உரிமை ?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என மத்திய அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக இருப்பதாகக் கூறி அதனை தடை செய்ய சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் […]

விஜய்சேதுபதியால் கைவிடப்பட்ட படத்தில் சிவகார்த்திகேயன்

மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். விக்னேஷ் சிவன் தற்போது சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்சேதுபதி நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற படம் தொடங்கியது. இதில், விஜய் சேதுபதியுடன் த்ரிஷா, நயன்தாரா ஆகிய இருவரும் […]

ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க ஆசை

ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டு‌ம் எனும் ஆசை தனக்கு இருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் காலா திரைப்படம் அடுத்தாண்டுதான் திரைக்கு வரும் என படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் அறிவித்துள்ளார். சென்னையில் மும்பை தாராவி போன்ற அரங்கம் அமைத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், 60 சதவீத‌ படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்‌. மேலும், ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டு‌ம் எனும் […]

பிக்பாஸால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இல்லை

பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை என்று நடிகர் கமலஹாசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடைகோரும் வழக்கில் கமலஹாசன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. பதில் மனுவில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை. இந்த வழக்கில் தமிழக அரசை சேர்த்தது தவறு, மத்திய அரசு அல்லது கண்காணிப்பு குழு மட்டுமே ஆராய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு பதிலளிக்க […]

சதுரங்கவேட்டை-2 டீசர் வெளியீடு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சதுரங்கவேட்டை-2 படத்தின் டீசர் இன்று வெளியானது. ஏமாறுபவர்களுக்கு தண்டனை அவர்கள் இழக்கும் பொருள். ஏமாற்றுபவர்களுக்கு தண்டனை தனிமையும், நிம்மதியற்ற வாழ்க்கையும் என்கிற சித்தாந்தத்தோடு 2014ம் ஆண்டு வெளியான படம் சதுரங்கவேட்டை. ஹெச் வினோத் குமார் இயக்கத்தில் நட்டி நடராஜன் , இஷாரா நாயர் நடித்த சதுரங்கவேட்டை மாபெரும் வெற்றியடைந்தது. இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கி இருக்கிறார். நடிகர் மனோபாலா தயாரித்துள்ளார். […]

ஜியோ

ஜியோவின் தீபாவளி பரிசு

ஜியோ பைபர் சேவை மூலம் 100ஜிபி அதிவேக டேட்டா வெறும் 500 ரூபாய்க்கு தீபாவளி முதல் வழங்கப்படவுள்ளது என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ஜியோ பைபர் சேவை விரைவில் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்தது. இந்நிலையில் 1 ஜிபிபிஎஸ் இணைய வேகத்தில் ஜியோ பைபர் சேவை தீபாவளி முதல் 100 நகரங்களில் தொடங்கப்படும் என ஜியோ தெரிவித்துள்ளது. இத்திட்டம் முதலில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், […]

ஓவியா நடித்த படம் அடுத்த வாரம் ரிலீஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் கவனிக்கப்படக் கூடிய நடிகையாகிவிட்டார் ஓவியா. அவருக்கு இருக்கும் இந்த புகழை அருவடை செய்ய திரையுலகினர் பலரும், முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தெலுங்கில் நடித்த ‘ஐடி நா லவ் ஸ்டோரி’ படம் அடுத்த வாரம் ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தில் தருண் நாயகனாக நடித்துள்ளார். கடந்த மே மாதம் இப்படத்தின் ட்ரெய்லரை நாகர்ஜூனா வெளியிட்டார். கன்னடத்தில் வெற்றிபெற்ற ‘சிம்பிள் அஹி ஒந்த் லல் ஸ்டோரி’ […]

நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் மிரட்டல்

தேவைப்பட்டால், தமிழக அரசுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்,” என, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், நேற்று நடந்தது. கூட்டம் முடிந்ததும், ஸ்டாலின் அளித்த பேட்டி: முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என, அ.தி.மு.க., பிரிந்ததிலிருந்து, தமிழகத்தில், அசாதாரண சூழல் நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையில், தமிழக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் தொடர்ந்து […]

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை:30 குழந்தைகள் பலி

உ.பி.மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30 குழந்தைகள் உயிரிழந்தன. உ.பி.மாநிலம் கோரக்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களில் சுமார் 30 குழந்தைகள் உயிரிழந்தன. இது குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்கி குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து […]

அணிகள் இணையுமா: பன்னீர்செல்வம் பேட்டி

அ.தி.மு.க அணிகள் இணைப்பு பேச்சு குறித்து, அதிகாரபூர்வமாக எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை,” என, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் கூறியதாவது: ஆறு மாதங்களுக்கு முன், நாங்கள் தர்ம யுத்தத்தை துவக்கினோம். அப்போது கூறப்பட்ட கருத்துக்களை, தீர்மான மாக கொண்டு வந்துள்ளனர். பாதிவந்துள்ளனர்; மீதி வரட்டும்; அதன்பின், எங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கிறோம். எங்களின் முந்தைய நிலைப்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை. இதுவரை பேச்சு […]