Sunday , February 2 2025
Home / அருள் (page 303)

அருள்

அனிதாவின் குடும்பத்துக்கு லாரன்ஸ் செய்த செயல் என்ன தெரியுமா?

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நிதிஉதவி வழங்கி இருக்கிறார். நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காத வேதனையில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதா பிளஸ்-2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். அனிதா தற்கொலையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், …

Read More »

கரீபியன் தீவுகளை சூறையாடிய ‘இர்மா’ சூறாவளி: 14 பேர் பலி

கரிபீயன் தீவுகளை இர்மா புயல் சூறையாடியுள்ளது. இதில் 14 பேர் பலியாகினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்காவின் 2 அணு உலைகள் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த வாரம் வீசிய ஹார்வி புயலால் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அட்லாண்டிக் கடலில் தற்போது உருவாகியுள்ள இர்மா சூறாவளி மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் கோரத்தாண்டவமாடி வருகிறது. கரீபியன் தீவுகளில் உள்ள அமெரிக்காவின் சுயாட்சி பெற்ற போர்ட்டோரிகா, …

Read More »

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி

மெக்சிகோ தென் கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5 பேர் பலியாகினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.0-ஆக பதிவாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட தகவலில், “மெக்சிகோவின் தென் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரமான கவுத்தமாலாவில், ரிக்டர் அளவுகோலில் 8.0 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்த நிலநடுக்கம் தென்மேற்கே உள்ள பிஜிஜப்பான் நகரிலிருந்து 123 கிலோமீட்டர் தொலைவில் …

Read More »

கொரிய எல்லையில் சீனா போர் ஒத்திகை

கொரிய தீபகற்ப எல்லையில் சீன ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியதைத் தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க தென்கொரியாவின் முப்படைகளும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வடகொரியா விவகாரத்தில் சீனா ஏற்கெனவே தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளது. “வடகொரியா மீது அமெரிக்காவும் தென்கொரியாவும் போர் தொடுத்தால் அதனை தடுப்போம். ஒருவேளை அமெரிக்கா, தென்கொரியாவை வடகொரியா தாக்கினால் …

Read More »

திருச்சியில் இன்று பா.ஜ.க பொதுக்கூட்டம்

சென்னை: நீட் க்கு எதிரான போராட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளதை வரவேற்கதக்கது என பா.ஜ.க மாநில தலைவர் கூறினார். இது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை: சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது வரவேற்கதக்கது. இந்த கூட்டம் மக்களை திசை திருப்பும் கூட்டம். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து நாளை (செப்..9) மாலை 4 மணிக்கு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் …

Read More »

எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் கடிதம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் உட்பட மேலும் 3 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் கொடுத்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இந்த 19 பேரில் ஒருவரான கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார். இதனால் தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. இந்நிலையில் ஆளுநர் …

Read More »

பாஜகவின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது அனிதாவின் தற்கொலை…

சென்னை : அனிதாவின் தற்கொலை மூலம் தமிழக மக்களுக்கு பாஜக தன்னுடைய செயல்பாடுகளின் நிலையை விளக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நடிகை குஷ்பு கடந்த ஜீலை 18ம் தேதி டுவிட்டரில் இருந்து தாம் விலகுவதாகக் கூறினார். அரசியல், சமூக பிரச்னைகளுக்கு டுவிட்டர் வலைதளம் மூலம் தனது கருத்துகளை உடனுக்குடன் பதிவிட்டு வந்தார் குஷ்பு. இந்நிலையில் …

Read More »

அதிமுக ஆட்சி கவிழும் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது – முதல்வர் ஆவேசப் பேச்சு

ஈரோடு: அதிமுக ஆட்சி நிலைக்காது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுவது ஒரு போதும் நடக்காது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஈரோட்டில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் உள்பட பெரும்பாலான அமைச்சர்கள் கலந்துகொண்டனர். மேலும், விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அந்த உரையில், அதிமுக அரசு …

Read More »

வீட்டுக்குள்ளும் போராட்டம் நடத்தக் கூடாது.. ஆசிரியை சபரிமாலாவுக்கு போலீஸ் எச்சரிக்கை

விழுப்புரம்: நீட்டுக்கு எதிராக அரசு ஆசிரியை வேலையை ராஜினாமா செய்த சபரிமாலா வீட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுய்பட்டுக்கொண்டிருந்த போது, போலீசார் அவருடைய வீட்டுக்குள் சென்று மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை சபரிமாலா, நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் போராடுவதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதையடுத்து, தனது ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்தார். மேலும் இன்று ஒருநாள் …

Read More »

பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள்… போலீஸ் தடையை மீறி திமுக கூட்டம்…

சென்னை: மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய கோரியும், திமுக சார்பில் திருச்சியில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீட் தொடர்பான போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்தது. பல ஆயிரம் தொண்டர்களும், மாணவர் அமைப்பினரும் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த பிறகு, கூட்டத்தை ரத்து செய்வது சரியா …

Read More »