Thursday , February 6 2025
Home / அருள் (page 295)

அருள்

சிவராம் கொலையாளிகள் மீது நடவடிக்கை உடன் அவசியம்! – ஐ.நா. சென்ற சிவாஜிலிங்கம் வலியுறுத்து

ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு  உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அங்கு வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “ஊடகவியலாளர் சிவராம் இல்லையெனில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை. சிவராம் படுகொலையுடன் …

Read More »

கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாழடைந்த கட்டடப் பகுதியில் இருந்தே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உயிரிழந்த சடலம் தொடர்பில் அடையாளம் காணும் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

இடைக்கால அறிக்கையை அடியோடு நிராகரித்தார் வடக்கு முதல்வர் விக்கி!

“புதிய அரசமைப்பு உருவாக்காத்துக்கான இடைக்கால அறிக்கை தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்பது திண்ணம். சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதாகவே குறித்த அறிக்கை உள்ளது. எதனைப் புறக்கணித்து நாம் எழுபது வருடங்களுக்கு மேலாகப் போராடி வந்தோமோ அதனை வலியுறுத்துவதாகவே அறிக்கை அமைந்துள்ளது.” – இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் இன்று மாலை கேள்வி – பதில்களுடன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- கேள்வி:- உத்தேச அரசமைப்பு …

Read More »

இலங்கையில் பியர் உற்பத்தியை அதிகரிக்க உத்தேசம்!

பியர் உற்பத்திக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டு வருவதாக கிறிஸ்தவ மத அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் வாய்மூல கேள்வி நேரத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “கேள்வியைக் கேட்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுற்றுலாத்துறை சிறப்பாக காணப்படுகின்ற வெளிநாடுகளுக்குச் சென்று பார்த்தால் அங்கு சிறிய …

Read More »

26ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு!

எதிர்வரும் 26ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி ஆகிய தினங்களில் விசேட நாடாளுமன்ற அமர்வுகள் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். 26ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிமுதல் இரவு 7.30 மணிவரை நாடாளுமன்றம் நடைபெறும். அன்றையதினம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான கட்டளைச் சட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளபோதும் தேர்தல்களை நடத்துவதற்கு …

Read More »

பிக்பாசில் இருந்து வெளியே போகிறார் ஹரீஷ்..! சுஜா காப்பாற்றப்பட்டது எப்படி?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விதிமுறைப்படி வாரம் ஒருவர் வீதம் வெளியேற்றப்பட வேண்டும். அதன்படி இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் சினேகனை தவிர மற்ற 5 பேரும் உள்ளனர். அதாவது சினேகன் கோல்டன் டிக்கெட் வாங்கி விட்டதால் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டார். எனவே சுஜா, கணேஷ், ஹரீஷ், ஆரவ் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இதில் குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் …

Read More »

வடிவேலுக்கு பயம் வந்துவிட்டது.! சர்ச்சை கேள்வி எழுப்பிய தாடி பாலாஜி…!!

தமிழ் சினிமாவில் இன்று வரை வடிவேலு என்ற காமெடி நடிகருக்கு மாற்றே இல்லை. அந்த அளவிற்கு அவரின் ஆதிக்கம் அவர் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் இருந்துக்கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் இவருடன் பல படங்களில் நடித்த தாடி பாலாஜி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் வடிவேலு முன்பு போல் இல்லை. அவர் எப்போதும் ஒரு காட்சி நடித்து முடித்துவிட்டால் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவார். ஆனால், தற்போதெல்லாம் ஒன்றுக்கு …

Read More »

ஓவியாவுக்காக முகத்தை கிளீன் ஷேவ் செய்த ஆரவ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலவிதமான உணர்வுகள் அரங்கேறியுள்ளன. பாசம், கோபம், துரோகம், சண்டை, மருத்துவ முத்தம், கட்டிப்பிடி வைத்தியம் என பல விஷயங்களுக்கு மத்தியில் ஒரு காதலும் அரங்கேறியது. ஆனால் இது ஒருதலை காதலாக மாறி ஓவியா மனம் நொந்து வெளியேறினார். இவர் ஆரவ்விடம் பேசும்போது, தனக்கு மீசை, தாடி வைத்த ஆண்களைத் தான் பிடிக்கும் என்று கூறினார். இவர் விரைவில் 100வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …

Read More »

தனிக்கட்சி தொடங்குவதாக கமல் அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கப் போவதாக கூறியுள்ளார். 100 நாளில் தேர்தல் வந்தால் போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார். இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் …

Read More »

பிரதமர் மோடியின் திட்டத்திற்கு முழு ஆதரவு: ரஜினிகாந்த் அறிவிப்பு

தூய்மை இந்தியா திட்டத்தில் பிரதமர் மோடிக்கு தான் முழு ஆதரவு அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய ரசிகர்களை சந்தித்தார். அப்போது, அரசியல் பற்றிய தனது கருத்துக்களை தெரிவித்தார். ‘போருக்கு தயாராக இருங்கள். தேவைப்படும் போது களம் இறங்குவேன். அரசியல் சிஸ்டம் சரியில்லை’ என்று கூறினார். இதனால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனவே, ரஜினி …

Read More »