Wednesday , August 27 2025
Home / அருள் (page 284)

அருள்

இனிப்புக் கொடுத்த இராணுவத்தினரிடம் கேப்பாபிலவு மக்கள் சரமாரியாகக் கேள்வி!

முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இனிப்புக் கொடுத்த படையினரிடம் அவர்கள சரமாரியாகக் கேள்வியெழுப்பினர். இலங்கைப் படையினரின் 68ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேப்பாப்பிலவில் நிலைகொண்டுள்ள படையினரால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு நேற்று இனிப்பு வழங்கப்பட்டது. இதன்போது பேராட்டக்காரரான ஆறுமுகம், படையினரிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தார். “எப்போது எங்கள் இடங்களை விடுவீர்கள்” என்றார். இதற்குப் பதிலளித்த படையினர், “மிகவும் கஷ்டப்பட்டு உங்கள் வாழ் இடங்களில் இருந்த எங்களது முகாம்களை …

Read More »

ஒட்டுசுட்டானில் சுடலையை ஆக்கிரமித்துள்ளது இராணுவம்! – பொதுமக்கள் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள வெடுக்குநாரி பொது மயானத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர் எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்தப் பொதுமயானத்தை மீளக் கையளிக்கப் படையினர் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும், அந்தப் பகுதியில் புத்தரின் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஒட்டுசுட்டான் கிராமவாசிகளும், முத்தயன்கட்டு கிராமவாசிகளும் வெடுக்குநாரி சுடலையைக் காலம் காலமாகப் பயன்படுத்தி வந்த நிலையில் 2009ஆம் ஆண்டு படையினர் ஆக்கிரமித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. …

Read More »

அமைச்சரவைக் கூட்டத்தில் ஐ.தே.க. – சு.க. அமைச்சர்களிடையே கடும் வாய்த்தர்க்கம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்குமிடையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது கடும் வாய்த்தர்க்கம் நடந்ததால் கடும் அமளிதுமளி ஏற்பட்டதாக அறியமுடிகின்றது. அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த வாக்குவாதங்கள் அமைச்சர்களிடையே நடந்துள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றிருப்பதால் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது …

Read More »

பிணைமுறி மோசடி விசாரணை: ஐ.தே.க. அமைச்சர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டும்!

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைகளில் எதுவித தலையீடுகளையும் தம்மால் செய்யமுடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் அதனை எதிர்கொண்டேயாக வேண்டுமென்றும், அதில் சமரசத்துக்கே இடமில்லையென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான …

Read More »

தாய்வான் வங்கி மோசடி: அரசசார்பற்ற நிறுவனமொன்றும் விசாரணைப்பொறிக்குள்!

தாய்வானில் பிரபல வங்கியொன்றில் கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒருதொகை இலங்கையிலுள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ள இணைய மோசடி தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. இந்த மோசடியுடன் தொடர்புட்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், இதனுடன் அரச சார்பற்ற நிறுவனமொன்றும் தொடர்புபட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த அரச சார்பற்ற நிறுவனம் கொள்ளையிடப்பட்ட பணத்தின் ஒருபகுதியை தனது கணக்கில் வைப்பிலிட்டுக் கொண்டுள்ளதாகவும், குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் இனிவரும் …

Read More »

புதிய அரசமைப்புக்கு ஆதரவு திரட்ட சர்வகட்சி கூட்டத்துக்கு மைத்திரி ஏற்பாடு!

ஜனாதிபதி

அரசமைப்பு நிர்ணய சபையின் இடைக்கால அறிக்கைமீது விவாதம் நடைபெறுவதற்கு முன்னர் அனைத்துக்கட்சி மாநாடொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தேசித்துள்ளார். ஜேர்மன், பின்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. புதிய அரசமைப்புக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளும் தீவிர பிரசரங்களை முன்னெடுத்துவருவதுடன், நாட்டைப் பிளவுபடுத்துவதற்காகவே புதிய அரசமைப்பு கொண்டுவரப்படவுள்ளது எனவும் சுட்டிக்காட்டிவருகின்றன. இதனால், …

Read More »

புதிய அரசமைப்பு குறித்து ஜயம்பதி, சுமந்திரனிடம் 20இல் கேட்டறிவார் பப்லோ!

இலங்கையின் புதிய அரசமைப்பு முயற்சிகள் தொடர்பாக அறிந்துகொள்வதில் ஐ.நா. அதிகாரிகளும் ஆர்வம்கொண்டுள்ளனர். அந்தவகையில் நிலைமாறுகால நீதி, சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை ஆராய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதங்கள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறிப் எதிர்வரும் 20ஆம் திகதி புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான இடைக்கால அறிக்கை குறித்து கொழும்பில் முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். புதிய …

Read More »

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வடக்கில் ஹர்த்தால்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணத்தில் முழுமையான ஹர்த்தால் நடைபெறவுள்ளது என அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். இந்தக் ஹர்த்தாலுக்கு பல பொது அமைப்புகளும், சிவில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், வடக்கு …

Read More »

உடலுறுப்புகள் செயலிழக்கும் நிலையில் உண்ணாவிரதக் கைதிகள்!

“அநுராதபுரம் தொடர் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடலுறுப்புகள் செயலிழக்கும் நிலையை அடைந்துள்ளன. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மௌனத்தைக் கலைத்து உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:- “தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய வழக்கை வவுனியா நீதிமன்றத்திலேயே விசாரிக்கவேண்டும், அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றக்கூடாது …

Read More »

புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து புலம்பெயர் அமைப்புகளுக்கு விளக்கம்!

புதிய அரசமைப்பு குறித்தும் அதன் முக்கியத்துவம் தொடர்பிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு விளக்கமளிக்க அரசு முடிவுசெய்துள்ளது. புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சூழலில் அதன் உள்ளடக்கம் குறித்து உள்நாட்டில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் கருத்தாடல்கள் வலுப்பெற்று வருகின்றன. தெற்கில், நாடு இரண்டாகப் பிளவுபடக் போகின்றது. சமஷ்டியைக் கொண்டுவரப் போகின்றனர் என அரசியல் இலாபத்துக்காக தீவிர இனவாதப் பிரசாரத்தில் மஹிந்த அணியான பொது எதிரணி …

Read More »