நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான இரண்டாம் நாள் விசாரணைகள் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளன. பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாமில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, இன்றைய தினம் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தமது விளக்கத்தை முன்வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது […]
Author: அருள்
மாபெரும் கூட்டணியுடன் களமிறங்கும் – பிரதமர் மகிந்த
சிறிலங்கா பொதுஜன முன்னணி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பன ஒன்றிணைந்து செயற்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனைத்து இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளுடன் நேற்று நடந்த சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போது கூட்டணிக்கான இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும், அதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் பிரதமர் மகிந்த கூறியுள்ளார். இந்த சந்திப்பில் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, சிறிலங்கா […]
எதிர்வரும் தேர்தலில் மஹிந்த மைத்திரி கூட்டணியா? அதிர்ச்சியில் மக்கள்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி ஒன்றின் ஊடாக போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். இதற்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இன்றைய ராசிபலன் 13.11.2018
மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் இழந்த உரி மையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள். ரிஷபம்: காலை 10 மணி முதல் உடல் அசதி, சோர்வு யாவும் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. […]
இன்றைய ராசிபலன் 12.11.2018
மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட் டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுபார்க்க வேண்டிவரும். அக்கம்- பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்தவிஷயங்களை பகிர்ந்துக் […]
விஜய்க்கு இதே பொழப்பு தான்…! பிரேமலதா விஜயகாந்த்
விஜய்க்கு வேற வேலையே இல்லை, சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து அடுத்தவர்களின் பிழைப்பில் மண் அள்ளிபோடுவதையே வேளையாக வைத்துள்ளார் என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டிள்ளார். ‘’சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டும். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மோதல்களில் ஈடுபட கூடாது. திரையுலகினர் திரைப்படங்களை சர்ச்சைக்குள் கொண்டுச்சென்று, அதன் மூலம் படத்தை ஓட்ட நினைக்கிறார்களா? என்றும் தோன்றுகிறது. ஏன் என்றால் அண்மையில் நடந்துவரும் நடவடிக்கைகளை பார்க்கும்போது அப்படித்தான் யோசிக்க […]
நாங்க என்ன பிச்சகாரங்களா? சீறும் கமல்
சர்கார் படத்தில் இலவசங்கள் தீயில் போட்டு எரிப்பது போன்ர காட்சி இடம்பெற்றதை அடுத்து இதற்கு அதிமுகவினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதில் விஜய்யின் பேனர்கள் கிழிக்கப்பட்டு ரகளையுடம் நடந்தது. அப்போது நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலவருமான கமல்ஹாசன், முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் […]
மெழுகுவர்த்தி போராட்டத்துக்கு தயாராகும் ஐ.தே.க
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக, மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு கங்காராம விகாரைக்கு அருகில் இந்த மெழுகுவர்த்திப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நேற்றைய தினம் சிலாபம் முன்னேஷ்வரம் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டதாகத் […]
நாட்டு மக்களுக்கு திடீர் இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்த
இலங்கையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான தொலைபேசி அழைப்புக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான தொலைபேசி அழைப்பு சேவை நிறுவனத்தினால் நூற்றுக்கு 10 வீதம் தொலைபேசி அழைப்புக்கான வரிப்பணம் குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் மக்களுக்கு வரி நிவாரணங்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அதன் ஒரு கட்டமாக தொலைபேசி அழைப்புக்கான வரிப்பணத்தை குறைப்பதற்கு, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மகனை தொடர்ந்து திடீரென கட்சி தாவிய மகிந்த
பிரதமர் மகிந்த ராஜபக்ச சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுண கட்சியில் சற்றுமுன்னர் உறுப்பினராக இணைந்துகொண்டுள்ளார். அவருடன் மேலும் பல சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





