சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தானே பிரதமர் என்று கூறிக்கொண்டு அரச நிதியை பயன்படுத்துவது தேசத்துரோகம் என்றும் குற்றம்சாட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்த மற்றும் அவரது விசுவாசிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றில் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ச மற்றும்அவரது அமைச்சரவைக்கு எதிராக இரண்டு தடவைகள் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட […]
Author: அருள்
சர்வதேச தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து சர்வதேச தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். நேற்றையதினம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளுடன அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, சுவிட்ஸர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் தூதுவர்களும் கலந்து கொண்டுள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு இதன் போது விளக்கம் […]
ரணில் தலைமையில் அலரி மாளிகையில் இன்று முக்கிய கலந்துரையாடல்
ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று இடம்பெறவுள்ளது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பிநிலைக்கு மத்தியில், கடந்த நாடாளுமன்ற அமர்வுகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. புதிய பிரதமரை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்டு வரும் அதே சந்தர்ப்பத்தில், ரணிலுக்கும் நாடாளுமன்றம் […]
மைத்திரிக்கு செக் வைக்கும் கரு?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடமையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் தவறியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி பிரதம நீதியரசர் நளின் பெரேராவிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவிய அக்கடிதத்தில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றில் பெரும்பான்மையை பெற்ற புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமித்திருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால […]
இன்றைய ராசிபலன் 21.11.2018
மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப் பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நேர் மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனு சரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய […]
முதல்வர் எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின்
கஜா புயாலால் தமிழக வரலாற்றில் டெல்டா மாவட்ட விவசாயிகளை பெருமளவில் பாதித்துள்ளது கஜா புயல். ஏராளமான மக்கள் தன் வீடுகளை, சொத்துக்களை இழந்து பரிதாபமாக நிற்கிறார்கள் .இந்நிலையில் தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்பட்டு மக்களின் நலன் பேண் வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : சில தினங்களுக்குமுன்பு வந்த கஜா புயலால் இதுவரை 8 மாவட்டங்கள் கடுமையாக […]
மற்றுமொரு முக்கிய முடிவுக்குள் நகரும் சம்பந்தன்
இலங்கையில் உள்ள உலக நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று மாலை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்குச் சம்பந்தன் இந்தச் சந்திப்பில் விளக்குவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து விலக்கிய ஜனாதிபதி, […]
யாழ்ப்பாணத்தில் பரவும் டெங்கு நோய்!
யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதற்க்குரிய சாதகமான நிலை ஏற்ப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாத காலப்பகுயில் 271 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 60 போர் வரையில் […]
பிரத்தானியாவில் இலங்கையருக்கு கிடைத்த அதிஷ்டம்!
பிரித்தானியாவில் அரசியல் அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கையர் ஒருவருக்கு, அந்த நாட்டின் உள்துறை அமைச்சினால் 19 ஆயிரத்து 500 பவுண்கள் நட்டயீடு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக தெரிவித்து பிரித்தானியாவில் அரசியல் அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கையருக்கே இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.பிரித்தானிய இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கே.ஜீ என்று அடையாளப்படுத்தப்படும் அவர், பிரித்தானிய குடியேறிகள் முகாமில் 2016ம் ஆண்டு ஜனவரி – பெப்ரவரி மாதக் காலப்பகுதியில் 30 நாட்கள் வரையில் […]
மகிந்தவை எதிர்த்து படையெடுக்கும் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள்
மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளித்த 122 பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொழும்பில் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவையும் அந்தக் கட்சி நாடியுள்ளது. மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக பாராளுமன்றில் மூன்று தடவைகள் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். […]





