ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் முக்கியமான சந்திப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான உயர் நீதிமன்ற விசாரணைகள் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக கூட்டணியின் அரசியல் நபர் ஒருவர் கூறியுள்ளார். இதேவேளை நேற்றையதினம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாயினும் அதனை தாம் ஏற்கவுள்ளதாக ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Author: அருள்
நீதிமன்றத்தில் இன்று தப்பினார் விக்னேஸ்வரன்
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு பிற்போடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அது குறித்து விசாரிக்க குழுவொன்றை அமைத்த முன்னாள் வடக்கு முதல்வர் அவர்களைப் பதவி நீக்க நடவடிக்கை எடுத்தார். இதற்கமைய, வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் பதவி […]
மைத்திரியின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்?
ஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உள்ளடங்கிய வீடியோவை கொழும்பு ஊடகமொன்று அகற்றியுள்ளதென கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகமானதன் காரணமாகவே மகிந்த ராஜபக்ஸவினால் பெரும்பான்மையை காண்பிக்க முடியவில்லை எனவும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதற்கு 500 மில்லியன்வரை கோரினர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்ட ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலைமைகள் குறித்து தனக்கு நன்கு தெரியும் எடினவும் […]
மைத்திரிபாலவிற்கு இப்படி ஒரு ஆபத்தா??
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, மனநலக் கோளாறு மனுவொன்றை தாக்கல் செய்யுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மன நலக்கோளாறு கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்துக்கு அமைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றினை ஆரம்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் மென்டாமுஸ் பேராணை ஒன்றின் ஊடாக உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே பெண்ணொருவர் குறித்த மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். […]
மஹிந்தவே இலங்கைக்கு பிரதமர்!
உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாது செயற்பட மைத்திரி – மஹிந்த தரப்பு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு உத்தரவிடும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இல்லை என்ற வாதத்தை முன்னிறுத்தி அரசாங்கத்தை முன்னெடுத்துச் […]
இன்றைய ராசிபலன் 10.12.2018
மேஷம்: உணர்ச்சிப் பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசவீர்கள், செயல்படுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்குவரும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்யோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள். ரிஷபம்: மாலை 5.14 மணி வரை சந்திராஷ்டமம் இருப் பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டி ருக்க வேண்டாம். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். […]
மஹிந்த – மைத்திரிக்கு எதிராக மேற்குலக நாடுகள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மொரட்டுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியே புதிய பிரதமரையும், அரசையும் நியமித்தார். அதற்கு எதிராக மேற்குல நாடுகளின் தூதுவர்கள் […]
இதுவே ரணிலின் பலம்…முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு!
மக்களால் நியமிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இன்று தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியாத அளவிற்கு சர்வதேச அழுத்தம் எழுந்துள்ளது. தூதரகங்களின் உதவியுடனும், புலம்பெயர் புலி அமைப்புகளின் உதவியுடனும் தன்னை பிரதமராக நியமிக்க ரணில் அழுத்தம் கொடுக்கின்றனர். இதுவே ரணிலின் பலம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அரசியல் அமைப்பினை கொண்டுவந்து வடக்கு கிழக்கினை இணைக்க தமிழ் தரப்பு சந்தர்ப்பம் பார்த்து காத்துள்ளனர் […]
மைத்திரியை கொலை செய்ய ராஜபக்ஷ ரெஜிமென்ட் சதிதிட்டம் ?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜபக்ஷ ரெஜிமென்டின் மூலம் மைத்திரிக்கு ஆபத்தான நிலை உள்ளதாக அவருக்கு நெருக்கமான அரசியல்வாதி வெளியிட்ட தகவல் மூலம் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதி கொலை செய்யப்பட்டால் மிகவும் ஆபத்தான நிலைமை ஒன்று நாட்டில் ஏற்படும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியலமைப்பு […]
இன்றைய ராசிபலன் 09.12.2018
மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமை யில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் […]





