பொதுமக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தினையடுத்து தம்புள்ளை, பனாம்பிட்டிய பிரதேசத்தின் ஏ – 9 வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த இரு மாதகாலமாக தரம் 5 இற்கு ஆசிரியர் ஒருவர் இல்லாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும் பெற்றோர்களும் அப்பகுதிபொதுமக்களும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக அப் பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Author: அருள்
மூத்த கட்சிகளுக்கு நேர்ந்த நிலை எமக்கு ஏற்படாது
மூத்த கட்சிகள் போன்று இக்கட்டான நிலைக்கு பொதுஜன பெரமுன முகங்கொடுக்காது என, கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இக்கட்டான தருணங்களை எதிர்கொள்வதை தவிர்த்துக் கொள்வதற்காக கட்சியின் சேமிப்பில் 21 மில்லியன் ரூபாய் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையிலுள்ள கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சியாக தொழிற்பட்ட காலத்தில் கட்சி தலைமை அலுவலகமான சிறிகொத்தவின் மின்சார கட்டணத்தை […]
நாளை தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திக்கின்றார் ரணில்
தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் பிரதமருக்கும் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளை இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தான விதம் தொடர்பாக, தமிழ் முற்போக்கு கூட்டணி அதிருப்தி வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த வாரம் பிரதமர் மற்றும் அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, ரவி சமரவீர ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அரசாங்கத்துக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற […]
மகிந்தவும் சம்பந்தனும் கூட்டணியா? பரபரப்பு தகவல்
மகிந்த அரசாங்கத்தினை கவிழ்ப்பற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பை ரணில் அரசாங்கம் பயன்படுத்திவிட்டு தற்போது ஏமாற்றி விட்டதாக கூறப்படுகின்றது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ரணிலுடன் இரகசிய ஒப்பந்தம் செய்ததாகவும் அது தற்போது கிழித்து எறியப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இலங்கை அரசிடம் இருந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு எப்பொழுதுமே ஏமாற்றம் அடந்து கொண்டே இருக்கின்றது. தலைமைகள் எப்பொழுதுமே தமது சுய இலாபங்களுக்காக கொள்கைகளை மாற்றிக்கொள்கின்றன. இப்படி ஏமாற்றும் அரசுக்கு சார்பாகவே சுமந்திரன் எம் பி வழக்காடியிருந்தார். […]
இன்றைய ராசிபலன் 08.02.2019
மேஷம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரி யங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் […]
இன்றைய ராசிபலன் 07.02.2019
மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்களில் சிலர்கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள். ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் […]
இன்றைய ராசிபலன் 06.02.2019
மேஷம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப்பேசுவார்கள். […]
பேட்ட, விஸ்வாசம் கோயமுத்தூரில் மட்டும் இத்தனை கோடி வசூலா!
பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது. இப்படங்கள் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வசூலை கொடுத்துள்ளதாக அனைத்து விநியோகஸ்தர்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் ராம் சமீபத்தில் ஒரு நிகழ்வில், தான் பேரன்பு படம் ரிலிஸின் போது கோயமுத்தூரில் இருந்ததாகவும், அப்போது படங்கள் பற்றி விசாரித்ததாகவும் கூறியுள்ளார். அதில் ஒரு விநியோகஸ்தர்கள் ‘சார் இந்த இரண்டு படங்களும் கடந்த 15 நாட்களில் […]
சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளாதது ஏன்?
பீல்ட் மார்ஷல் பதவிக்கு மதிப்பளிக்கப்படாத அணிவகுப்பிற்கு, இராணுவ சம்பிரதாயம் மற்றும் ஒழுங்கு மீறப்படும் இடத்திற்கு, பீல்ட் மார்ஷல் என்ற வகையில் என்னால் சென்று நிற்கமுடியாமையால் நான் அங்கு செல்வதைத் தவிர்த்தேன் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்றைய தின 71ஆவது தேசிய தின நிகழ்வில் தாம் கலந்துகொள்ளாமை தொடர்பில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார். எனக்குக் […]
முல்லைத்தீவில் அதிகாலை முதல் பலத்த மழை
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் மழை பெய்து வருகின்றது. இதனால், பல பகுதிகளிலும் வான்பரப்பை மழைமேகம் சூழ்ந்துள்ளதுடன், கரையோரங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது. இதனால் கரையோரப்பகுதி மீனவர்களின் பல வாடிகள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், மீனவர்களின் மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.





