Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான திருத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே குறித்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தின் மூலம் தொழிற்பேட்டை ஒன்று அமைவது மாத்திரமன்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …