Friday , June 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் ஐ.நாவின் அரசியல் விவகாரச் செயலர்

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் ஐ.நாவின் அரசியல் விவகாரச் செயலர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அலரி மாளிகையின் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியும், சிறிலங்காவின் சட்டம் , ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் உடன் இருந்தனர்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா சென்றிருந்த போது கடந்த ஜூன் 5ஆம் நாள், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மனைச் சந்தித்து, அரசியலமைப்பு மறுசீரமைப்பு, நல்லிணக்கம் போன்றவற்றில் தாக்கம் செலுத்தும் காரணிகள் தொடர்பாக பேச்சு நடத்தியிருந்தார்.

அதேவேளை, ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் நாளை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …