சவூதி மன்னர் இலங்கைக்கு திடீர் விஜயம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சவூதி மன்னர் அப்துல் அஸீஸ் இலங்கைக்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்றைய தினம் காலை 11.20 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிவிவாகர அமைச்சின் தகவல் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இவரின் இந்த விஜயத்தில், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது அறிய முடிகிறது.

முதல் சந்திப்பு இன்று பிற்பகல் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் இடம்பெறவுள்ளது. இன்று இரவு அவர் நாடு திரும்புவார் என்றும் அறியமுடிகிறது.

வளைகுடா நாடுகளில் கட்டார் அரசின் விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையிலேயே சவூதி மன்னினரின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *