அம்பாறை பொத்துவில் – பானம பகுதியில் உள்ள ஆற்றில் படகு சவாரியில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதாகவும் உயிரிழந்தவர் பானம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நண்பர்களுடன் சேர்ந்து குறித்த பகுதியில் உள்ள ஆற்றில் இளைஞர்கள் சிலர் படகு போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, படகு ஒன்று சமநிலை இழந்ததன் காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த படகை செலுத்திய இளைஞனே இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.