தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ஆதரவளித்த சந்தேகநபருக்கு 20 வருட சிறைத்தண்டனை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ஆதரவளித்த சந்தேகநபருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த குண்டுத்தாக்குதலினால் டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் பேஸ் போல் அணியின் 12 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு ஆதரவளித்த நாதன் எனப்படும் கனகசபை தேவதாசன் என்பவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இன்று உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *