சர்வதேச சமூகத்துடன் மோதும் கொள்கையை வெளிவிவகார அமைச்சு பின்பற்றக் கூடாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடந்த காலத்தில் தனிமைப்பட்ட மோதல் போக்கை பின்பற்றுகின்ற வெளிவிவகார கொள்கைக்கு திரும்பக்கூடாது. கடந்த கால வெளிவிவகார கொள்கைகளை மீண்டும் பின்பற்றினால் கடந்த நான்கு வருடங்களில் கிடைத்த பல நன்மைகளை இழக்க வேண்டி வரும் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய இராணுவ தளபதி தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவில் வெளிநாட்டு தூதுவர்களை தலையிடவேண்டாம் என வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.