இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 12 பேர் இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர்கள் பயன்படுத்திய இரண்டு விசைப் படகுகள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.