புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் கிணறு ஒன்றிற்குள் இருந்து நேற்றையதினம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கிணற்றில் இருந்து இரண்டு கைக்குண்டுகள், ஆர்.பி.ஜி எறிகணைகள், தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அவற்றை செயலிழக்க செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை விடுதலைப்புலிகளின் காலத்தில் பாவனையில் இருந்த வெடிபொருட்களே அவை எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.