Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வடக்கு – கிழக்கில் மக்கள் வீடுகள் அனைத்தும் சோதனை

வடக்கு – கிழக்கில் மக்கள் வீடுகள் அனைத்தும் சோதனை

தொடரும் குண்டுவெடிப்பு அச்சத்தினை தொடர்ந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் முஸ்லீம் மக்கள் வாழும் கிராமங்கள் அனைத்திலும் படையினர் குவிக்கப்பட்டு வீடுவீடாக சென்று சோதனை செய்யும் நடவடிக்கை முடக்கிவிடப்பட்டுள்ளது.

வீதிகளில் செல்பவர்களும் படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்படும் அதேவேளை அடையாளத்தினை உறுதிப்படுத்தும் நடவடிக்கையிலும் முப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள் அச்ச உணர்வுடன் மக்கள் வாழ்கின்றார்கள் வீதிகளில் செல்வதை தவிர்த்துவரும் நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள்.

இன்னிலையில் சில கிராமங்களை சுற்றிவளைத்த படையினர் கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை,மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv