ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான மனு மீதான விசாரணையின் தீர்ப்பும் 4மணியளவில் வெளியிடப்படும் எனவும் நீதிமன்றத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையிலேயே தீர்ப்பின் பின்னர் மைத்திரி தலைமையிலான விசேட கூட்டம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.