Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சஜித்தின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ரணில்

சஜித்தின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ரணில்

பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நடத்திய பேச்சுக்களின் போதும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய இடைக்கால அரசாங்கத்தில் பதவி ஏற்றுக் கொண்டால் பின்னர் நடைபெறும் பொதுதேர்தலில் போட்டியிடும் போது மக்கள் மத்தியில் தனக்கான ஓர் அங்கீகாரம் இழக்கப்படும் நிலை ஏற்பட்டு விடும் ஆகவே இந்தநிலையில், பிரதமர் பதவியைத் தற்போது தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

அவர்தொடர்ந்தும் கருத்துத் தெரிவி்ககையில், “இந்த நேரத்தில் பிரதமரின் பதவியை ஏற்றுக்கொள்ளும் நோக்கம் இல்லை, ஆனால் எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடும். எனினும், அதுபற்றி கட்சியின் செயற்குழு தான் முடிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv