Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் மைத்திரி

மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் மைத்திரி

ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தில் எனக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றம் சுமத்தியதோடு மட்டுமல்லாது ஜனாதிபதி பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் என பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

தற்போது அலரி மாளிகையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவித்த பொன்சேகா,

“பொய்க் குற்றச்சாட்டுக்களுக்காக சிறைக்கு செல்ல நான் பயமில்லை பொய் குற்றச்சாட்டிற்கு தண்டனை அனுபவிப்பது ஒன்றும் எனக்கு புதியதும் இல்லை மேலும் பொய் குற்றச்சாட்டுக்களை கூறி எங்களது வாயை அடைக்க முடியாது.”

“ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தில் எனக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றம் சுமத்தியதோடு மட்டுமல்லாது ஜனாதிபதி பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் என சரத்பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv