Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / விடுதலைப் புலிகள் விவகாரம்! விஜயகலா தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

விடுதலைப் புலிகள் விவகாரம்! விஜயகலா தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

வடக்கில் நேற்றைய தினம் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் பதவியில் உள்ள ஒருவர் அவ்வாறு கருத்து வெளியிட முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv