மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழுவுக்கு அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாளை வியாழக்கிழமை ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்கின்றது என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தனது பிரசார வேலைகளுக்காக தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைப் பயன்படுத்திய வகையில் அந்நிறுவனத்துக்குச் செலுத்தவேண்டிய 16 கோடி ரூபாவைச் செலுத்தத் தவறியுள்ளார் என்ற குற்றச்சாட்டின்கீழ் மஹிந்தவுக்கு எதிராக ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விளக்கமளிப்பதற்காகவே அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்கின்றது என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பில் தற்போது சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றார் என்று அவரது பிரத்தியேகச் செயலாளர் உதித லொக்குபண்டார தெரிவித்துள்ளார்.