ஈழ அகதிகளின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட ஈழத் தமிழர்களால் இந்தோனேஷியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
ஈழ அகதிகளின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாக சர்வதேச அகதிகள் நிறுவன அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்தே குறித்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட ஈழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தம்மை வேறு நாடுகளில் குடியேற்றுமாறு கோரி கடந்த ஐந்து நாட்களாக குறித்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இதன்போது, தங்களது அவல நிலை தொடர்பில், தமிழ் அமைப்புக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கரிசனை கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர்.




