Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்: ஜெகான் பெரேரா

இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்: ஜெகான் பெரேரா

இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்: ஜெகான் பெரேரா

இலங்கையின் அரசியல் சூழ்நிலையை கவனத்திற்கொண்டு இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் தலைவரும் ஜெனிவா சென்றுள்ள அரச தூதுக்குழுவின் பிரதிநிதியுமான கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜெனிவா வளாகத்தில் இலங்கை தூதுக்குழுவினால் ஏற்பாடு செய்யபட்டிருந்த உபகுழுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரச தலைவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். அதன்படி நல்லிணக்க செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நல்லிணக்க செயற்பாடுகளுக்கான பயணம் மெதுவாக முன்னெடுக்கப்படினும், அது முறையாக மேற்கொள்ளப்படும்.

எனவே நல்லிணக்க பொறுப்புக்கூறலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு காலஅவகாசம் வழங்கப்படுவது அவசியம் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …