தமிழக மீனவர்கள் 13 பேர் வடமாகாண கடற்பரப்பில் கைது
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்றைய தினம் இருவேறு கடற்பரப்பில் வைத்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் 9 பேர் வடமராட்சி வெற்றிலைக் கேணி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து படகொன்றில் பயணித்த தமிழக மீனவர்கள் நால்வர் ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை ஸ்ரீலங்கா கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படாது என ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




