நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமல் – சக்திகாந்த் தாஸ்
டில்லியில் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் கூறியதாவது: நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்தப்படும். இதற்கு அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.எஸ்.டி.,மசோதா தொடர்பான ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி ஆகிய வரைவு மசோதாக்களை மார்ச் 9ம் தேதி துவங்கும் இரண்டாவது கட்ட பட்ஜெட் பார்லிதொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இழப்பீடு வரைவு மசோதாவுக்கு ஏற்கனவே கடந்த பிப்ரவரி 18 ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.




