தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐனாதிபதிக்கு இடையில் இன்று அவசர சந்திப்பு
முல்லைத்தீவு – கேப்பாபுலவு, புலவுக்குடியிருப்பு, பரவிப்பாஞ்சான் மக்களின் காணி பிரச்சனைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐனாதிபதியை சந்திக்கவுள்ளது.
இந்த சந்திப்பு இன்றையதினம் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரச படையினரிடம் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு – கேப்பாபுலுவு – புலவுக்குடியிருப்பு – பரவிப்பாஞ்சான் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
போராட்டங்களில் ஈடுபட்டுவரும் வடக்கு மக்களுக்கு கிழக்கு மற்றும் தென்னிலங்கை மக்களும் அதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐனாதிபதியை சந்திக்கவுள்ளது.




