தினகரனிடம் கோரிக்கை வைத்த சபாநாயகர் தனபால்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தினகரன் தரப்புக்கு கிடைத்த முதல் வெற்றி ஆர்கே நகர் தேர்தல் வெற்றி. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் இந்த பதவியேற்பு விழாவை அமோகப்படுத்தினார்கள். வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டிடிவி தினகரன் சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டதும் அவரது ஆதரவாளர்கள், வருங்கால முதல்வர் டிடிவி தினகரன் வாழ்க என கோஷமிட்டனர். இந்த கோஷம் அறையையும் தாண்டி வெளியே கேட்டது. இதனால் என்ன செய்வதென்பது புரியாமல் இருந்தார் சபாநாயகர் தனபால்.

இதனையடுத்து சபாநாயகர் தனபால், இங்கே இப்படியெல்லாம் கத்தக்கூடாதுன்னு சொல்லுங்க என தினகரனிடம் கோரிக்கை வைத்தார். அதனை கேட்டு சிரித்தபடியே அமைதியாக இருங்க என கையை வைத்து சைகை காட்டினார் தினகரன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *