காற்­றின் வேகம் அதி­க­ரிக்­கும்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தெற்கு அந்­த­மான் தீவு­க­ளில், இலங்­கை­யி­லி­ருந்து 900 கிலோ மீற்­றர் தொலை­வில் குறைந்த தாழ­முக்­கம் நேற்று மாலை நிலை­கொண்­டி­ருந்­தது. இந்­தக் குறைந்த தாழ­முக்­கம் கார­ண­மாக வடக்கு – கிழக்­குப் பகு­தி­க­ளில் காற்­றின் வேகம் நேற்­றைய தினத்தை விட அதி­க­மாக இருக்­கும்.

இவ்­வாறு வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர் பிமே­ர­லால் தெரி­வித்­தார்.

தெற்கு அந்­த­மான் தீவு­க­ளில் நிலை கொண்­டி­ருந்த குறைந்த காற்­ற­ழுத்த தாழ்வு மையம், இந்­தி­யா­வின் ஆந்­தி­ரப் பிர­தே­சத்தை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

நேற்­று­முன்­தி­னம் மாலை இலங்­கை­யி­லி­ருந்து ஆயி­ரத்து 300 கிலோ மீற்­றர் தொலை­வில் நிலை கொண்­டி­ருந்­தது. நேற்று மாலை அது 900 கிலோ மீற்­றர் தொலை­வில் நிலை­கொண்­டி­ருந்­தது.

இது வங்­கக் கடல் ஊடாக இந்­தி­யா­வின் ஆந்­தி­ரப் பிர­தே­சத்தை நாளை சென்­ற­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இத­னால் இன்­றைய தினம் வங்­கக் கட­லில் காற்­றின் வேகம் நேற்­றைய தினத்தை விட அதி­க­மாக இருக்­கும். கரை­யோ­ரப் பகு­தி­க­ளி­லும் காற்­றின் வேகம் அதி­க­ரித்­துக் காணப்­ப­டும் -­என்­றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *