நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 52 பேர் காயமடைந்துள்ளதாக அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் தற்போதுவரை 14 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 752 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
481 வீடுகள் முழுமையாகவும், 15 ஆயிரத்து 780 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, பாதுகாப்பான 30 தற்காலிக வசிப்பிடங்களில் 961 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 509 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.