Thursday , February 6 2025
Home / முக்கிய செய்திகள் / மீள்குடியமர்வுக்காக நோர்வே அரசால் வடக்கு மாகாணத்துக்கு ரூ.150 மில்லி. நிதியுதவி

மீள்குடியமர்வுக்காக நோர்வே அரசால் வடக்கு மாகாணத்துக்கு ரூ.150 மில்லி. நிதியுதவி

வடக்­கில் மீள்­கு­டி­ய­மர்­வுக்­காக நோர்வே அரசு மேல­திக நிதி­யு­த­வி­யாக 150 மில்­லி­யன் ரூபா வழங்­க­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.இது தொடர்­பில் நோர்­வேத் தூத­ர­கம் அனுப்­பி­யுள்ள செய்­திக் குறிப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் புதி­தாக விடு­விக்­கப்­பட்ட மயி­லிட்­டித் துறை­மு­கத்தை அண்­டிய பகு­தி­க­ளில் மீளக் குடி­ய­ம­ரும் மக்­க­ளுக்­கான உத­வி­களை வழங்­கு­வ­தற்கு 150 மில்­லி­யன் ரூபாவை வழங்க முன்­வந்­துள்­ளது.

இதற்­கான உடன்­ப­டிக்­கை­யில் இலங்கை மற்­றும் மாலை­தீ­வுக்­கான நோர்­வே­ஜி­யத் தூது­வர் தூர்­பி­யோன் கவு­ஸத்­சேத்த மற்­றும் இலங்­கைக்­கான ஐக்­கிய நாடு­கள் நிகழ்ச்­சித் திட்­டத்­தின் வதி­வி­டப் பிர­தி­நிதி ஜோன் சொரென்ஸ்­டன் ஆகி­யோர் கைச்­சாத்­திட்­ட­னர்.

மயி­லிட்­டித் துறை­மு­கத்தை மீன்­பி­டிக்­கான மூலோ­பாய மைய­மாக மாற்­று­வ­தற்­கும் உட­னடி இடை­யீட்­டின் ஊடாக வள்­ளங்­கள் இந்­தத் துறை­மு­கத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான வழியை ஏற்­ப­டுத்­த­வும் ஐக்­கிய நாடு­கள் சபையானது நிகழ்ச்­சித் திட்­டத்­தின் மூல­மாக இலங்கை அர­சு­டன் இணைந்து பணி­யாற்­ற­வுள்­ளது.

இந்த உத­வி­யா­னது மீன்­பிடி, விவ­சாய, கால்­நடை மற்­றும் மாற்று வரு­வாய் தரக்­கூ­டிய செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்­டுள்ள சமூ­கங்­க­ளுக்கு நின்று நிலைக்­கக்­கூ­டிய வாழ்­வா­தார வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வ­த­னூ­டாக அவர்­க­ளின் பொரு­ளா­தார வாய்ப்­புக்­களை மீள­மைக்க உத­வு­வதை நோக்­கா­கக் கொண்­டது.

இதற்­கா­கச் சமூ­க­மட்­டத்­தில் திறன் பயிற்­சி­கள், பய­னுள்ள ஆலோ­ச­னை­கள், கரு­வி­கள், உப­க­ர­ணங்­கள், விதை­கள், அத்­தி­யா­வ­சி­ய­மான கட்­டு­மா­னங்­கள் மற்­றும் உள்­ளூர்­வே­லை­வாய்ப்­பு­கள் போன்­ற­வற்றை வழங்­க­வுள்­ளது.

இந்த உத­வி­யா­னது புதி­தாக விடு­விக்­கப்­பட்ட பகு­தி­க­ளில் மீளக்­கு­டி­ய­ம­ரும் 550 குடும்­பங்­களை பய­னா­ளி­க­ளா­கக் கொண்­டது.

நவம்­பர் 2015 முதல் யாழ்ப்­பா­ணம் மற்­றும் திரு­கோ­ண­மலை மாவட்­டங்­க­ளில் விடு­விக்­கப்­பட்ட பகு­தி­க­ளில் மீள்­கு­டி­யேற்­றம் ஆரம்­பித்­தது முதல் நோர்வே அரசு யாழ்ப்­பா­ணத்­தின் வள­லாய், தெல்­லிப்­பழை பகு­தி­க­ளி­லும் திரு­கோ­ண­ம­லை­யின் சம்­பூர் ப­கு­தி­யி­லும் புதி­தா­கக் குடி­யே­றிய மக்­க­ளின் வாழ்­வா­தா­ரங்­க­ளுக்­காக ஏற்­க­னவே 290 மில்­லி­யன் இலங்கை ரூபாவை வழங்­கி­யுள்­ளது என்று மேலும் தெரி­வித்­தது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv