Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கேப்பாபுலவு காணிகளை விரைவில் விடுவிக்க வேண்டும்!

கேப்பாபுலவு காணிகளை விரைவில் விடுவிக்க வேண்டும்!

இராணுவத்தால் கையக்கப்படுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு காணியை விரைவில் விடுவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு செயலாளர், இராணுவத்தலைமைக் கட்டளை அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரினால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டவாறு, 133 ஏக்கர் காணியை இம்மாதம் 23 ஆம் திகதிக்குள் விடுவிக்க வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த காணிகளில் இராணுவம் தொடர்ந்தும் தங்கியிருப்பதை நியாயப்படுத்த முடியாதெனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …