சம்­பந்­தனை வெறுங்­கை­யு­டன் அனுப்­பி­னால் வர­லாறு சிங்­க­ளக் கட்­சி­களை மன்­னிக்­காது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமி­ழர்­க­ளின் தலை­வ­ரான இரா.சம்­பந்­தனை வெறுங்­கை­யு­டன் வடக்­குக்­குத் திருப்பி அனுப்­பி­னீர்­கள் என்­றால் சிங்­க­ளக் கட்­சி­களை வர­லாறு மன்­னிக்­காது என்று தெரி­வித்­தார் அமைச்­சர் மனோ­க­ணே­சன்
மறைந்த தந்தை எஸ்.ஜே.வி.செல்­வ­நா­ய­கம், தமி­ழர்­க­ளைக் கட­வுள்­தான் காப்­பாற்­ற­வேண்­டும் என்­றார். சம்­பந்­தனை, இலங்கை நாட்­டையே கட­வுள்­தான் காப்­பாற்­ற­வேண்­டும் என்று சொல்­லும் நில­மைக்­குத் தள்ளி விடா­தீர்­கள்.

அவ­ரைப் பல­வீ­னப்­ப­டுத்தி, தீவி­ர­வா­தி­களை பலப்­ப­டுத்­தி­வி­டா­தீர்­கள்” என்­றும் அவர் கோரி­னார்.

அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யில் இடைக்­கால அறிக்கை மீதான நேற்­றைய விவா­தத்­தில் உரை­யாற்­றிய அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
எனக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் பல முரண்­பா­டு­கள் உள்­ளன. வழி­காட்­டல் குழு­வில் நான் கூட்­ட­மைப்புப் பிர­தி­நி­தி­க­ளு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­டு­ள்ளேன். அது வேறு விட­யம். ஆனால், எதிர்க்கட்சித் தலை­வர் சம்­பந்­தன் இன்று மிக­வும் இறங்கி வந்து பேச்சு முயற்­சி­க­ளில் ஈடு­பட்­டுள்­ளார். அதை­விட
அவ­ரால் இறங்க முடி­யாது என்று நான் அறி­வேன்.

அவரை தயவு செய்து வெறுங்­கை­யு­டன் வடக்­குக்கு அனுப்பி வைத்து விடா­தீர்­கள். அப்­படி அனுப்பி வைத்­தால் வர­லாறு உங்­களை மன்­னிக்­காது என்­பதை ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­திர கட்சி, மகிந்த அணி, மக்­கள் விடு­தலை முன்­னணி ஆகிய சிங்­க­ளப் பெரும்­பான்மை கட்­சி­கள் புரிந்து கொள்­ள­வேண்­டும்.
இந்த நாட்­டில் வடக்­கில், மலை­ய­கத்­தில், கிழக்­கும் மேற்­கில், தெற்­கில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு அதி­கா­ரப்­ப­கிர்வு என்­ப­தும், அத­னு­டன் சேர்ந்த தேசிய இனப்­பி­ரச்­சினை தீர்­வும் முக்­கிய விட­யங்­க­ளாக இருக்­கின்­றன. நாம் இதை முக்­கிய தேவை­க­ளாக கொண்டே இந்த அர­ச­மைப்பு விவ­கா­ரத்­தில் இணைந்து கொண்­டுள்­ளோம். முஸ்­லிம் மக்­க­ளின் நிலைப்­பா­டும் இதுவே என்று நான் எண்­ணு­கி­றேன்.

நாங்­கள் தேர்­தல்­முறை மாற்­றம் தொடர்­பி­லும் அக்­கறை கொண்­டுள்­ளோம். தமிழ் முற்­போக்கு கூட்­டணி, நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்ட அரச தலை­வர் முறை­மையை முழு­மை­யாக மாற்ற உடன்­ப­ட­வில்லை. அதி­கா­ரம் குறைக்­கப்­பட்டு, நாடா­ளு­மன்­றத்­துக்கு பதில் சொல்­லும், மக்­க­ளால் நேர­டி­யா­கத் தெரிவு செய்­யப்­ப­டும் அரச தலை­வர் முறை­மை­யையே நாம் விரும்­பு­கி­றோம்.
இந்த நாட்­டில் வாழும் பிர­தான இரண்டு இனங்­கள் மத்­தி­யில் ஒன்­றன் மீது ஒன்­றுக்­குச் சந்­தே­கங்­கள் இருக்­கின்­றன. அச்­சங்­கள் இருக்­கின்­றன.

சிங்­கள மக்­க­ளின் அச்­சம் என்ன? தமி­ழர்­கள் மீண்­டும் தனி­யொரு ஈழ­நாட்டை நோக்கி பய­ணிப்­பார்­களா என்­பது. தம் அர­சி­யல் இலக்கை அடைய மீண்­டும் ஆயுத போரை ஆரம்­பிப்­பார்­களா என்ற அச்­சம் சிங்­கள அர­சி­யல் கட்­சி­கள் மத்­தி­யில் உள்­ளன. இவை மிக நியா­ய­மான அச்­சங்­கள்.

தமிழ் மக்­கள் மத்­தி­யில் இரண்டு அச்­சங்­கள் உள்­ளன. ஒன்று, இந்த நாடு முழுக்க முழுக்க சிங்­கள பௌத்த நாடாக மாற்­றப்­பட்டு விடுமோ என்ற அச்­சம் அதில் ஒன்று. அடுத்­தது, அதி­கா­ரம் பகிர்ந்து வழங்­கப்­ப­டா­மல் தாம் ஏமாற்­றப்­பட்டு விடு­வோமோ என்­பது. இவை­யும் மிக­வும் நியா­ய­மான அச்­சங்­களே. இவற்றை சிங்­கள மக்­க­ளும், கட்­சி­க­ளும் புரிந்­துக்­கொள்ள வேண்­டும்.
இங்கே எனக்கு முன் உரை­யாற்­றிய மகிந்த ராஜ­பக்ச, தான் கொள்கை அடிப்­ப­டை­யில் அதி­கார பகிர்­வுக்கு உடன்­ப­டு­கி­றார் என்று கூறி­னார். தேசிய ஐக்­கி­யத்தை விரும்­பு­கி­றார் என்­றும் கூறி­னார். இந்­தக் கருத்­து­களை நான் வர­வேற்­கி­றேன். இங்கே சம்­பந்­தன் எதிர்க்­கட்சி தலை­வ­ராக இருக்­கி­றார்.

அது­பற்றி நான் ஒன்றை கூற­வேண்­டும். நாட்­டின் நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்சி தலை­வர் பத­வியை, ஏற்­று­கொண்­ட­தன் மூலம், சம்­பந்­தன் இன்று இலங்கை நாட்டு வியூ­கத்­துக்­குள் வந்­து­விட்­டார். அதன்­மூ­லம், தனி­நாடு என்ற வியூ­கத்தை கைவிட்டு விட்­டார். சிங்­கள மக்­க­ளுக்கு இதன்­மூ­லம் அவர் வழங்­கி­யுள்­ளது நல்ல ஒரு செய்­தி­யா­கும்.
இதை மகிந்த ராஜ­பக்ச புரிந்­துக்­கொள்ள வேண்­டும்.

இனி­மேல் இங்கே இல்­லா­ததை சொல்லி நாட்டை குழப்­பு­வதை விட்­டு­விட்டு நாம் தேசிய ஐக்­கி­யத்தை நோக்­கிப் பய­ணிக்க வேண்­டும்- என்­றார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *