பிக்பாசை வைத்து கல்லா கட்டும் ஆர்த்தி..!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ் முதல் பரிசை வென்றார். அவருக்கு ரூ 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

மற்றவர்களுக்கு பரிசு பணம் எதுவும் வழங்கப்படவில்லை. மற்றவர்களுக்கு பரிசு பணம்தான் கிடைக்கவில்லை.

மற்றபடி சினிமா வாய்ப்புகள், விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதன் மூலம் பணம் கொட்டி வருகிறது.

இதனை பயன்படுத்தி ஆர்த்தி புது வகையில் பணம் பண்ண ஆரம்பித்து விட்டார். அதாவது தன்னை பேட்டி எடுக்க எடுக்க வருபவர்களிடம் பணம் வாங்க ஆரம்பித்துள்ளார்.

மற்ற போட்டியாளர்கள் பணம் எதுவும் வாங்குவதில்லை. ஆனால் ஆர்த்தி மட்டும் பேட்டி கேட்டால் எவ்வளவு கொடுப்பீர்கள் என்று கேட்கிறார்.

பேட்டிக்கு எவ்வளவு வேண்டும் என்று திருப்பி கேட்டால், அவங்க இவ்வளவு கொடுத்தாங்க நீங்கபார்த்து செய்யுங்க என்று சொல்கிறாராம்.

இதற்கு முன்பு பணம் கேட்காத ஆர்த்தி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன் மீது விழுந்துள்ள புது வெளிச்சத்தை புது பிசினசாக மாற்றி நல்ல கல்லா கட்ட தொடங்கி உள்ளார். பிழைக்க தெரிந்தவராகி விட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *