அடிப்படை உறுப்பினராகவே இல்லாத ஒருவர் பொதுக்குழுவைக் கூட்ட முடியாது – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுக்குழுவை கூட்டுவேன் என தினகரன் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அடிப்படை உறுப்பினராகவே இல்லாத ஒருவர் பொதுக்குழுவைக் கூட்ட முடியாது அரசியலை, சினிமா போல நினைக்கிறார் கமல்ஹாசன். டிவிட்டரில் மட்டும் இருந்தால் முதலமைச்சராக முடியாது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணைய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார். ஜெயலலிதா மரணத்தில் தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. அரசோடு சேர்ந்து மக்களும் பணியாற்றினால் டெங்குவை ஒழிக்க முடியும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *