Wednesday , August 27 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வராவிட்டால்… மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம்

நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வராவிட்டால்… மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம்

திண்டுக்கல்: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரவில்லை எனில் எடப்பாடி ஆட்சியை அகற்ற மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலை அருகே உள்ள அண்ணா திடலில் முப்பெரும் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலர் க.அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் பெரியார் விருது என்.கிருஷ்ணமூர்த்திக்கும், அண்ணா விருது பெ.சு.திருவேங்கடத்துக்கும் இதேபோல் பாரிவேந்தர் விருது அ.அம்பலவாணனுக்கும், கலைஞர் விருதை சங்கரி நாராயணனுக்கும் வழங்கி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=KJuMYgMtZXo

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …