பாஜகவின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது அனிதாவின் தற்கொலை…

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சென்னை : அனிதாவின் தற்கொலை மூலம் தமிழக மக்களுக்கு பாஜக தன்னுடைய செயல்பாடுகளின் நிலையை விளக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நடிகை குஷ்பு கடந்த ஜீலை 18ம் தேதி டுவிட்டரில் இருந்து தாம் விலகுவதாகக் கூறினார். அரசியல், சமூக பிரச்னைகளுக்கு டுவிட்டர் வலைதளம் மூலம் தனது கருத்துகளை உடனுக்குடன் பதிவிட்டு வந்தார் குஷ்பு. இந்நிலையில் சுமார் இரண்டு மாத இடைவேளையில் அவர் மீண்டும் டுவிட்டர் பக்கத்திற்கு வந்துள்ளார்.

பாஜகவின் காலடியில் ஜனநாயகம் கொல்லப்படும் இந்த வேளையிலும் நான் என்னுடைய கருத்தை தெரிவிக்கவில்லையென்றால் இந்தியக் குடிமகளாக இருப்பதற்கே எனக்கு அருகதை இல்லை என்று குஷ்பு டுவீட்டியுள்ளார். அனிதாவின் தற்கொலை குறித்தும், பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்தும் குஷ்பு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *