கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவும் அபாயம்!
கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்கள் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா அபாயம் மிக்க மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த மாவட்டங்களில் மீள் அறிவிப்பு வரையில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிவரை நீடித்தது.
இன்று காலை 6 மணியிலிருந்து தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் வெள்ளிக்கிழைமை 27 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றும் அபாயம் அதிகம் காணப்படுவதால் குறித்த மூன்று மாவட்டங்களும் கொரோனா அபாயம் மிக்க மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவினை நீடிக்கவும் அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இலங்கையில் கொரோனா பாதிப்பாளர்கள் 100 ஆக அதிகரிப்பு
-
தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார விதிகளை மீறிய 15 பேர் அதிரடி கைது…!
-
ஊரடங்கு தொடர்பில் வெளியான விசேட அறிக்கை…!
-
யாழில் இனங்காணபட்டுள்ள கொரோனா நோயாளி
-
இலங்கையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!
-
ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது!
-
இலங்கை மதுபான நிலையங்கள் மூடல்
-
பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை!
-
கொரோனா – இராணுவ தளபதியின் முக்கிய வேண்டுகோள்
-
நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – பந்துல குணவர்தன