மன்னார் மறைமவாட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு துணை ஆயர் மேதகு கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணான்டோ நியமனம்-(படம்) -மன்னார் நிருபர்-

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
மன்னார் மறைமவாட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு துணை ஆயர் மேதகு கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணான்டோ நியமனம்
 மன்னார் மறைமவாட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு துணை ஆயர் மேதகு கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக திருத்தந்தை பாப்பரசர் அறிவித்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை இன்று புதன் கிழமை(22) மாலை 4.30 மணியளவில் விசேட அறிவித்தலை வழங்கியுள்ளார்.
-மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் வைத்து இன்று புதன் கிழமை (22) மாலை 4.30 மணியளவில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை சார்பாக, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,பங்கு மக்கள் மத்தியில் குறித்த விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில் மேலும்  மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவிக்கையில்,,,
கொழும்பு மறைமாவட்டத்தின் முதலாவது துணை ஆயராக கடமையாற்றி வந்த  ஆயர் மேதகு கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணான்டோ அவர்களை மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை பாப்பரசர் நியமித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை சார்பாக தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
புதிய ஆயரின் பதவியேற்பு நிகழ்வுகள் தொடர்பில் பின்பு அறிவிக்கப்படும் குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *