ஐ.தே.கட்சியில் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும் திஸ்ஸ

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர் என்ற வகையில் தனது அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கெலிஓயா பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் ரீதியாக முடிவுகளை எடுக்க இன்னும் காலம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்த காரணத்தை அடிப்படையாக கொண்டு தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தள்ளி விடுவது அநீதியானது எனவும் அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாகவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *