அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை சம்பந்தமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதால், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சந்திம வீரக்கொடி,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பவர்கள் கட்சியின் ஒழுக்க கட்டுப்பாட்டை கொண்ட உறுப்பினர்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளை சுதந்திரக் கட்சி மேற்கொள்ள தயாரில்லை எனவும் கூறியுள்ளார்.

அதேவேளை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சம்பந்தமாக ஜனாதிபதி பொருத்தமான நடவடிக்கையை எடுப்பார் என நம்புவதாக பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *