மனங்களில் மாற்றம் வேண்டும் – சிவஞானம் சிறிதரன்
தனது இனம் சார்ந்த கருத்துக்களை வெளியிடும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு எதிராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்துக்களை வெளியிட்டமை நல்லாட்சி அரசாங்கத்தின் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக குரல் கொடுப்பதை அமைச்சர்கள் தடுத்து வருகின்றனர். இதன் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை எவ்வாறு மைத்திரி ரணில் அரசாங்கம் ஏற்படுத்தப் போகின்றது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தில் உள்ளவர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.




