ஊரடங்கு தொடர்பில் வெளியான விசேட அறிக்கை…!
கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்திலும் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அமுலாக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரைக்கும் நீடிக்கும் என்பதோடு அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என்பதோடு குறித்த மாவட்டங்களில் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்படும் எனவும் அந்த பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அன்றைய தினம் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படும் என்பதோடு வெளிநாட்டு பயணிகளுக்கு இடம்விட்டு இடம்மாறுவதற்கும் முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
யாழில் இனங்காணபட்டுள்ள கொரோனா நோயாளி
-
இலங்கையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!
-
ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் அதிரடி கைது!
-
இலங்கை மதுபான நிலையங்கள் மூடல்
-
பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை!
-
கொரோனா – இராணுவ தளபதியின் முக்கிய வேண்டுகோள்
-
நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – பந்துல குணவர்தன
பயனுள்ள இணைப்புகள் இங்கே




