ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மருதுகணேஷுக்கு ஏற்கனவே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆகியவை ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது மதிமுகவும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இன்று சென்னையில் மதிமுகவின் தலைமை அலுவலகமான ‘தாயகம்’ அலுவலகத்தில் மதிமுகவின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக வைகோ …
Read More »உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான மேலும் இரு வர்த்தமானிகள் நாளை
உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது சம்பந்தமான இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை நாளை 4 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடவுள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயம் தொடர்பாக ஜனாதிபதியால் இதற்கு முன்னர் முன்வைத்த அறிக்கை மற்றும் எல்லை நிர்ணய ஆய்வுக்குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை உள்ளடக்கி அந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதாக செயலாளர் தெரிவித்துள்ளார். ஒரு வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினாலும் மற்ற வர்த்தமானி அறிவித்தல் உள்ளூராட்சி …
Read More »பாடசாலை சீருடை வவுச்சர் இவ்வாரம்
பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களை இவ்வாரம் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் ஏற்கனவே வவுச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வருடம் 2445 மில்லியன் ரூபா பெறுமதியான சீருடை வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
Read More »சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் ஆரம்பம்.!
2018ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது. இந்து சமயங்களின் நம்பிக்கைகளின்படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் …
Read More »ஆரையம்பதியில் கோர விபத்து : மூன்று உயிர்கள் ஸ்தலத்தில் பலி
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனத்தால் மோதுண்டு இளம் கன்று உட்பட மூன்று மாடுகள் பலியாகியுள்ளன. ஆரையம்பதி பிரதேச சபைக்கும், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலைக்கும் முன்பாக உள்ள பிரதான வீதியில் இக்கோகோர விபத்து இடம்பெற்றுள்ளது. ஆரையம்பதி பிரதேச சபைக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக ஏற்கனவே பல செய்திகள் வாயிலாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தும் அதிகாரிகளினதும் கால்நடைகளின் …
Read More »சீரற்ற காலநிலை உக்கிரமடையலாம்.!
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் உக்கிரமடையவுள்ளதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. எனவே குறித்த சீரற்ற கால நிலை தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் அவதானமாக இருந்துகொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான் தீவுகளில் தற்போதைக்கு தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. அத்தாழமுக்கம் எதிர்வரும் தினங்களில் உக்கிரமடைந்து மத்திய வங்காள விரிகுடாவினூடாக இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளது. அதற்கிணங்க …
Read More »விமானத்தில் பேஸ்புக் நிறுவனரின் தங்கைக்கு பாலியல் தொல்லை!
உலகப் புகழ் பெற்ற பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க். இவரின் தங்கை தனக்கு விமானத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மார்க் ஜுக்கர்பெர்க்கின் தங்கையான ராண்டி ஜுக்கர்பெர்க் மெக்சிகோவிலிருந்து மஜத்லன் நகருக்கு அலாஸ்கா ஏர் விமானத்தில் சென்றுள்ளார். விமானத்தில் அவருக்கு அருகாமையில் இருந்த பயணி ஒருவர் ராண்டியிடம் பாலியல் உரையாடல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் மற்ற பெண் பயணிகள் குறித்தும் அவர் கமெண்ட் அடித்து உள்ளார். …
Read More »வடக்கில் 273 விவசாயக் கிணறுகளை புனரமைக்க நிதி
வடக்கு மாகாணத்தில் 273 விவசாயக் கிணறுகளை புனரமைப்பதற்காக 100 விவசாயிகளுக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாயத் திணைக்களத்தில் நேற்று மாலை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 50 ஆயிரம் ரூபா தொடக்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை மதிப்பீட்டுக்கு அமைவாக 273 விவசாயக் கிணறுகளைச் சீரமைக்க 100 விவசாயிகளுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. …
Read More »விஷால் போட்டி குறித்து பிரபலங்களின் கருத்துக்கள்
ரஜினி, கமல், விஜய் போல் அரசியலுக்கு வரப்போவதாக கூறிக்கொண்டு முடிவெடுக்க முடியாமல் திணறிக்கொண்டிராமல் வெற்றியோ, தோல்வியோ களமிறங்க முடிவு செய்துவிட்ட விஷாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் விஷாலின் திடீர் அரசியல் பிரவேசம் குறித்து பிரபலங்கள் கூறியதை பார்ப்போம் இயக்குனர் அமீர்: சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷாலின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும். மேலும் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில், நடிகர் விஷால் போட்டியிட காரணம் என்ன? …
Read More »க.பொ.த சாதாரணதரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினைகளை உடன் அறிவிக்கலாம்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் தொடர்பிலான பிரச்சினைகளை 1911 என்ற தொலைபெசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை பரீட்சாரத்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் பாடசாலை அதிபருக்கும், தனியாருக்கான அனுமதிப்பத்திரங்கள் பரீட்சாரத்திகளின் விலாசத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார். 4 29, 493 பாடசாலை பரீட்சாரத்திகளும், 259,080 தனியார் பரீட்சாத்திகளும் இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ளனர். இதன்பிரகாரம் …
Read More »