விபத்தில் பரிதாபமாக பலியான 22 வயது இளைஞன்! மோட்டார்சைக்கிள் விபத்தில் மிதமிஞ்சிய வேகத்தால் 22 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக சென்ற இளைஞன் கட்டுப்பாட்டை மீறி, பாறையில் மோதியில் இந்த விபத்து நேர்ந்தது. விபத்தில் கொடகவெலவில் வசிக்கும் 22 வயதுடைய ஷெகான் என்ற இளைஞர் உயிரிழந்ததாக கொடகவெல பொலிசார் தெரிவித்தனர்.
Read More »விரைவில் பிரித்தானியப் பிரஜைகளுக்கு நீல நிறக் கடவுச்சிட்டு.!
விரைவில் பிரித்தானியப் பிரஜைகளுக்கு நீல நிறக் கடவுச்சிட்டு.! நீல நிறக் கடவுச்சீட்டுக்கள் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரித்தானியப் பிரஜைகளுக்கு இந்த நீல நிறக் கடவுச் சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து தற்போதைய பேர்கன்டி(burgundy) வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. கடவுச்சீட்டின் பின் அட்டையில் இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸின் மலர் சின்னங்கள் இடம்பெறும். …
Read More »டிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி! ராமசங்கர் ராஜ்பார் காட்டம்
டிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி! ராமசங்கர் ராஜ்பார் காட்டம் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ராமசங்கர் ராஜ்பார் உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– ஆமதாபாத்தில் ‘நமஸ்தே டிரம்ப்‘ என்ற டிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவழிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவை நிலவும்போது, ஒரு தனிநபர் வரவேற்புக்கு ரூ.100 கோடி …
Read More »கொரோனா வைரசால் தென்கொரியாவில் 7 பேர் பலி
கொரோனா வைரசால் தென்கொரியாவில் 7 பேர் பலி சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் உகானில் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் மிரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் …
Read More »10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போராளி மரணம்! சோகத்தில் மக்கள்
10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போராளி மரணம்! இறுதிப் போரில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்றையதினம் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியைபிசேர்ந்த 43 வயதான ஜெயந்தன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதி வன்னிப்போரில் கடுமையான காயத்திற்கு உள்ளான இவர் கடந்த 10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அத்துடன் அவருக்கு புற்றுநோயும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மரணமடைந்த முன்னாள் போராளிக்கு …
Read More »இந்தியா வந்தடைந்தார் ஜனாதிபதி டிரம்ப்!
இந்தியா வந்தடைந்தார் ஜனாதிபதி டிரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். இவர்களுடன் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா டிரம்பும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இதன்போது அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திரங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். தொடர்ந்து டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு …
Read More »சஜித் கூட்டமைப்பிற்கும் இடையில் முரண்பாடு!
சஜித் கூட்டமைப்பிற்கும் இடையில் முரண்பாடு! இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்த பயணத் தடை தொடர்ப்பில் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்களால் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் 85% வாக்குகளைப் பெற்ற பின்னரும், பாரபட்சமின்றி நீதியை மட்டுமே எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாட்டை சஜித் பிரேமதாச பாராட்டவில்லை என்பது ஏமாற்றமளிப்பதாக தமிழ்த் தேசியக் …
Read More »கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட அதிரடிப்படை – 60 பேர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட அதிரடிப்படை – 60 பேர் கைது கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு சில தரப்பினர் தொடர்ந்து சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்துபவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்கானித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த வாரங்களில் பயணிகளுக்கு அழுத்தம் பிரயோகித்த 60 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் …
Read More »Rasi palan today 24.02.2020 | இன்றைய ராசிபலன் 24.02.2020
Rasi palan today 24.02.2020 | இன்றைய ராசிபலன் 24.02.2020 மேஷம் இன்று உற்றார் உறவினர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ரிஷபம் இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் …
Read More »ஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி
ஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக செல்லவுள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கங்களின் தலைவி கலாஞ்சனி, செயலாளர் லீலா, மற்றும் அனந்த நடராஜா, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலநாயகி ஆகியோரும் ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளனர். அடுத்துவரும் நாட்களில் ஜெனீவா செல்லும் இவர்கள் வலிந்து …
Read More »