நடிகர் விஷால் ஆர் கே நகர் தேர்தலில் சுயாட்சியாக கடந்த வாரம் களம் இறங்கினர். இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவருக்கு அதிர்ச்சியாக கையெழுத்து போலி என மனுவை நிரகரித்தது தேர்தல் ஆணையம். இப்பிரச்சனை கடந்த இரண்டுநாட்களாக பரவலாக பேசப்பட்டு வருகிறது .விஷால் தன பக்கம் இருக்கும் நியாயத்தையும் , ஆதாரத்தையும் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் நேற்று தேர்தல் அணையும் ராஜேஷ் லகானி யிடம் நடந்ததை சொல்லி மேல்முறையீடு …
Read More »வாக்குகளை குறைக்க முடியாவிட்டால் கிரிக்கெட் சபையை கலைத்துவிடுவேன்.!
வாக்குகளுக்காக கழகங்களை பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் சொல்வதை நிர்வாக சபையினர் கேட்டு நடக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதனைத் தடுக்க தற்போதுள்ள 140 கழக வாக்குகளை 75ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன். அப்படி என்னால் குறைக்க முடியாவிட்டால் நான் தற்போதுள்ள இலங்கைக் கிரிக்கெட் நிருவாகத்தை கலைத்துவிடுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர. இலங்கைக் கிரிக்கெட்டை சீரழித்துவிட்ட திலங்க சுமதிபால தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகத்தை இதற்குமேலும் விட்டுவைக்கப் போகிறீர்களா …
Read More »கூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் அபாயம்: நிபுணர் எச்சரிக்கை..
சர்வதேச அளவில் ‘டிமென்சியா’ எனப்படும் மறதி நோயால் 4 கோடியே 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வருகிற 2050-ம் ஆண்டில் இந்நோயினால் 13 கோடியே 10 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. மறதி நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தியும் அதற்கு சிகிச்சை முறை கண்டறியப்படவில்லை. இது குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த …
Read More »இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்தார் ட்ரம்ப்!
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து மத்திய கிழக்கில் புதிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன. “இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறேன்” என, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து அறிவித்தார். இவ்வறிவிப்பின் மூலம் ஜெருசலேமை உரிமை கோரிய இஸ்ரேல்-பலஸ்தீனத்தின் ஏழு தசாப்த போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். அறிவிப்புடன் நின்றுவிடாத ட்ரம்ப், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் …
Read More »கடற்படையின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காணிகள் நில அளவீடு
கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் மன்னார், பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணியை விடுவிப்பதற்காக நிள அளவை செய்யப்பட்டன. மன்னார் பள்ளிமுனை மீனவ குடும்பங்களின் காணிகளையும் வீடுகளையும் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் அவற்றை விடுவிக்குமாறு கோரி பாதிப்படைந்துள்ள பள்ளிமுனை மக்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நீதிமன்ற கட்டளைக்கு அமையவும் இரு பகுதினரின் சம்மதத்துடன் அக் காணிகளை அளக்கும் நடவடிக்கையில் மன்னார் பிரதேச செயலகம் இன்று வியாழக்கிழமை (07.12.2017) நடவடிக்கையை …
Read More »தொடரும் வேலை நிறுத்தம் : மக்கள் அசௌகரியத்தில்.!
ரயில்வே சாரதிகளுக்கான உதவியாளர்களை சேர்த்துக்கொள்ளும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ரயில்வே சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தத்தில் இன்று நள்ளிரவு முதல் ரயில்வே நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுபாட்டாளர்களும் …
Read More »இந்தியாவில் நிலநடுக்கம் !
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று இரவு 8.45 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தராகண்ட் மாநிலத்தில் பரவலான நிலநடுக்கம் பதிவாகியுள்ள அதேவேளை, இந்தியாவின் தலைநகரான டில்லியிலும் உணரப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கமானது ரிசடடர் அளவுகோலில் 5.5 என பதிவாகியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய-மத்தியதரை நிலநடுக்க ஆய்வு மையத்தின் தகவல்களின் படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் டெஹ்ராடூனுக்கு …
Read More »